அண்மை

பொய் பெண்ணியவாதிகள் - மாதவிமணி

பொய் பெண்ணியவாதிகள்

பெண்ணியம் பேசி தங்களின் சதைகளைத்தின்ற ஆண்குறியதிகாரம் உடைய டோலன்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரது குரலாக இக்கட்டுரை அமைகிறது(வேண்டுமென்றால் மதியுடம்படுத்திய காமக்கொடூரன்களது பெயர்களையும் மதியுடம்பட்ட தங்களின் பெயர்களையும் கூற இவர்கள் எந்நிலையிலும் தயாராகத்தான் இருக்கிறார்கள்).

ஆண்பாலினத்தவர்களையும் பெண்பாலினத்தவர்களையும் முழுமையாக புண்படுத்தும் பகுதியாகவே பெரும்பாலும் இக்கட்டுரை அமையும்.

எடுத்துக்காட்டுகள் இல்லாமல் பேசினால் போலிகளுக்கு- தங்களை தான் சொல்கிறார்கள் என்றும் தங்களிடமும் இப்படித்தான் பேசுகிறான்கள் என்பதும் கூட தெரியாமல் போகலாம்..

பல உரையாடல்களை அப்படியே குறிப்பிடப்பட்டுருப்பதன் நோக்கமும் அதுவே.

பல கைகள் உங்கள் மீதும் நீட்டப்படலாம் டோலன்களே! 

பண்பாட்டுக்கு எதிராக பேசிவிடுவதால் பகுத்தறிவாளன், முற்போக்குவாதி என கிரீடம் சூட்டிக்கொண்டு, "பெண்ணுறுப்பைக்  கழிவறைகளாக பயன்படுத்திக்கொள்ள பெண்ணியம் பேசும் ஆண்குறியன்களே!!

நாங்கள் கருப்பையை அறுத்து கொள்ள தயாராக இருக்கிறோம்.உங்களில் எத்தனை பேர் ஆண்குறியை அறுத்துக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள்!??

"அறுத்துப்போட்டுவிட்டு பிறகு பேசுங்கள்! இதுவரை நீங்கள் பேசிய பெண்ணியத்தையும், பெரியாரியத்தையும் சமத்துவத்தையும்".

பெண்ணியம் பேசுவதற்கு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை.

பெண்கள் எல்லோரும் பெண்ணியவாதிகளா என்றால் அதுவும் இல்லை ‌.

யாரும் யார் மீதும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது.காலங்காலமாக இருந்து வரும் ஆண் மய்ய சமுதாயத்தை,  ஆணாதிக்கத்தை எதிர்க்க வேண்டும் தகர்க்க வேண்டும். சமத்துவம் வேண்டும் சம உரிமை.....ஆஆஆ இதெல்லாம் இருக்கட்டும்.இவையெல்லாம் நாம் அனைவரும் அறிந்தது தான்.

1.Liberal feminist 

2.Radical feminist 

3.Marxists feminist 

4.Culture feminist 

5.Eco feminist 

என பல்வேறு உட்பிரிவுகளில் பெண்ணியவாதிகள் இயங்கி வருகின்றனர்.

இவர்களையெல்லாம் தூக்கி விழுங்கிவிடுகிற அளவுக்கு தீயாக இயங்கிவரும் ஒரு பெண்ணியவாத கூட்டத்தை நாம் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர்கள் மிக மிக முக்கியமானவர்கள்.

சில காலமாக...

'பெரியார் என்ன பெரியார் அந்த ஆளையே மிஞ்சி விழுங்கி செரித்துவிடுகிறேன் பார்' என்ற அளவுக்கு பல ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள், பெண்களை (13+.. ) பண்பாட்டு சங்கிலியிலிருந்து விடுவிப்பதற்காக  பலவிதமான பாடங்களை ("Free ஆக") போதித்தித்து பண்பாட்டுக்கு எதிரான உடல்களாக தயார் செய்கிறார்கள்.

அதாவது அப்படியானதொரு புறத்தோற்றத்தில் அவனவனுக்கான  காமப்பசியை தீர்த்துக்கொள்வதற்காக பெண் உடல்களை உளவியல் ரீதியாக தயார் செய்கிறான்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.அதற்கு அவன்கள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள்தான் Atheist, feminist, periyarist,....என்பன.

அத்தகைய புரட்சியாளன்களுக்கும்,எவன்களாவது 

பெரியாரைத் திட்டினால் கூட, 'அவன் கடக்கான் பூமர்' என்று கடந்து போய்விடும் "'நவீனமூளை"' (வஞ்சப் புகழ்ச்சி) கொண்ட போலி டோலிகள், பெண்ணியம் பேசுவதாக நினைத்துக்கொண்டு உளவியல் ரீதியாக 24/7 பாலியல் செயலுக்காக மதி உடம்படுத்துதலில்(brain wash) ஈடுபடும் டோலன்களை யாரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் போதும் காலரை தூக்கிக் கொண்டு வந்துவிடுவாள்கள்(இதற்கு முன் அவன்களால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை அறிந்த பிறகு, வேறு யாரும் இவ்வாறு அவன்களது அடங்க மறுக்கும் ஆண்குறியதிகாரத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் post போட்டாலோ, தனியாக எச்சரித்தாலோ 'fake id' என்றும், இப்படி நிறைய பேர் இருக்காங்க தோழர் நம்மள இயங்க விட மாட்டாங்க, முற்போக்காளர்களுக்கு எவ்வளவு ப்ரச்சன இருக்கு பாருங்க தோழர், இதெல்லாம் கண்டுக்காதீங்க என்பான்கள் அவன்களே.எனக்கு தெரியும் தோழர் உங்களப்பத்தி என்பாள்கள் புதிய டோலிகள்.) இத்தகைய புரட்சிகரமான கூட்டத்தினருக்கு பெயர்தான், 

FAKE FEMINIST - பொய் பெண்ணியவாதிகள்.

துப்பட்டா போடுங்க, புடவக்கட்டுங்க, பேண்ட் சட்ட ஜீன்ஸ் போடாதிங்க, கண்ட வசனம் எழுதியிருக்குற டி சர்ட் போடாதிங்க, கை இல்லாத டிரஸா என்னா இது சினிமாக்காரியாட்டம், அஞ்சி மணி ஆணா வீட்டுக்கு வந்துரணும், முடிய பின்னி போடு பறக்கவிடாத "இந்த மாதிரி உடை அணியறதுனால தான் பாலியல் வன்கொடுமைகள் நடக்குது"... + 

இப்படி பேசுகிறவ'ன்'கள் ஒரு பக்கம்.

இந்த கூட்டத்தார் இந்த சமூகத்துக்கு புதிதல்ல. "நான் எந்த மாதிரியான ட்ரஸ் போட்டா உனக்கென்ன உன் வேலைய நீ பாரு, உனக்கு பாலியல் உணர்வு தூண்டப்படுதுன்னா நீ உன்ன சரிப்பண்ணிக்க பாரு,+..." 

இவ்வாறு அந்த பண்பாட்டு காவலர்களுக்கு பதிலடி கொடுத்தாயிற்று, கொடுப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.

இன்னொரு ரகம் இருக்கிறது....

தோழர் நீங்க மாஸ் தோழர், 

வேற லெவல் தோழர் நீங்க,

நீங்க தான் தோழர் பெரியார் கண்ட புரட்சி பெண், அது தோழர் இது தோழர் என்று 'மூச்சிக்கு மூச்சி.. தோழர் தோழர்' என்று பேசுவா'ன்'கள்.

தோழர் என்ற சொல்லுக்கான மதிப்பை கெடுத்த(ப்ப)தற்கு முக்கியப்பங்கு இவன்களுக்கு உண்டு.

பொதுவாக சமூக வலைதளங்களில் அந்தப் புரட்சியாள'ன்'களின்பதிவைப் பார்த்துவிட்டு (நல்ல பதிவாகத்தான் இருக்கும்.ஆனால்,எழுத்தளவில் மட்டும் இவன்கள் பெண்ணியம் பேசுவான்கள்.அதுவும் புரிதல் இல்லாத பெண்ணியம்) "wowww ஆகா" என்று நினைத்து கருத்தொத்த நிலையில்  நண்பர்களாவது வழக்கம்தான்.கருத்தை விட, கருத்தை சொல்பவர்களுக்கு தான் இங்கு மதிப்பு மிகுதி.காரணம்:  இந்திய மூளை.

பெண் விடுதலை பற்றி பெண்களிடம் பெண்கள் பேசுவதைவிட ஆண்கள் பேசினால்தான் பெண்களுக்கும் பிடி(இனி)க்கிறது என்ன செய்ய...!? 

உண்மை பெண்ணியம் பேசும் பெண் பெண்ணியவாதிகளோடு இணைந்து இயங்கும், கலந்தாலோசிக்கும் பெண்களைவிட, முழுக்க முழுக்க முழுக்க பெண்களை போகப்பொருளாகவே மாற்றிட ஒவ்வொரு கணமும் துடித்துக்கொண்டிருக்கும் ஆண்குறியன்களோடு பெண்ணியம் பேச தான் டோலிகளுக்கும் பிடித்திருக்கிறது.

"பெண்களுக்கு ஆண்கள் மீது இருக்கிற பண்பாட்டு மதிப்பை தூக்கித்தூற எறியாதவரை, ஒரே ஒரு ஆணுக்கு இருக்கிற, ஈராயிரமாண்டுக்கும் மேலான, அந்த ஆணாதிக்க திமிரை ஆணவத்தை தைரியத்தை கீழ் இமையில் முளைத்திருக்கும் ஒரேயொரு சிறிய மயிரில் பாதியளவுக்கூட அசைத்துப்பார்க்க முடியாது." 

ஓரளவிற்கு கிராம புறத்தை சேர்ந்த பெண்கள் என்றாலோ பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருக்கும் குழந்தைகள் என்றாலோ பாடம் எடுக்க இன்னும் அவன்களுக்கு வசதி... கல்லூரி மாணவிகள் என்றால் சொல்ல வேண்டியதில்லை, அதிலும் வீட்டைவிட்டு வெகு தொலைவில் வந்து படிக்கும் மாணவிகள்/ பணிபுரியும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.

இவ்வளவு எளிதாக இவன்களை நம்புவதற்கான காரணம் குடும்ப நிறுவனமும் அங்குள்ள அடக்குமுறையும் தான்.

குடும்பத்தில் சக உதிரத்தவராயினும் ஆண் பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் அதீத முன்னுரிமை ('இன்னைக்கி என்ன சோறு,தொட்டுக்க என்ன வேணும்' என்பதை முடிவெடுப்பதிலிருந்து).எல்லாவித கட்டுப்பாடுகளும் பெண்பாலினம் என்ற ஒரே காரணத்தினால் திணிக்கப்படுவதினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு மெய்யான மருந்து பெண்விடுதலை தான்.

வீட்டில் சமத்துவம் பேசி, ஆண்பாலினத்தின் வாயாக இருக்கும் பெண்பாலினத்தவரிடம், வாங்கிக்கட்டிக்கொள்ளும்  தமிழ்ப்பெண்கள்,

 'பெண்ணியம்,பெரியாரிய' புத்தகங்களை வாசிப்பதற்கு முன்பாக சமூக ஊடகங்களின்தான் முதலில் தெரிந்துக்கொள்கின்றனர்( பள்ளிகளில் பெயர்களை அறிமுகம் செய்து வைப்பதோடு சரி).

ஆண்களையே ஆண்கள் சரமாரியாக திட்டிக்கொள்வார்கள்.பழமைவாதிகளின் பேச்சு உள்ள காணொளியின் comments-ல் பார்த்தால் பாதிக்கும் மேல் அந்த பண்பாட்டு காவலனை கிழித்து தொங்கவிட்டிருப்பது ஆண்களாகத்தான் இருப்பார்கள்.அருமை அண்ணா.செம்ம அண்ணா.. என்று மறு comment செய்த அந்த நொடியில் இருந்து...ஏதோ பிறந்ததிலிருந்து நன்றாக பழகிய ஒருவரிடம் பேசுவது போல சாதாரணமாக பேசிவிடுவான்கள்.

"அண்ணன் ன்னு சொல்லாதிங்க 'தோழர்'ன்னு சொல்லுங்க (old version:- அய்யோ அண்ணன்னு சொல்லாதிங்க மனசு வலிக்குது.இது new version).குடும்பம், உறவு-ன்ற அமைப்புனால தான் சிக்கல் வருது"...என்று பாடத்தை தொடங்குவான்கள்.அண்ணன் என்று சொல்லிவிட்டால் தங்கையாகிவிடுவாள்கள் அல்லவா?! ஹாஹா (அண்ணன் வெறியள்களும் தங்கை வெறியன்களும் பெருகிவரும் கதையும் நாம் அறிந்ததே).தோழர் என்று சொன்னவுடனேயே நாம் புரட்சியாளர்கள் ஆகிவிட்டோம் என்பது எண்ணம்.

மிகவும் சாதாரணமாக மாதவிடாய் பற்றி, mastrubation பற்றி, virginity bladder பற்றி ,எந்த வகையான மேல் உள்ளாடைகள் அணிய வேண்டும்,எந்த நாப்கின்கள் பயன்படுத்த வேண்டும்,கப் தான் பயன்படுத்தனும், நம்ம ஊர் பொண்ணுங்களுக்கு இது பத்தின புரிதலே இல்ல..பலமுறை என் தோழிகளுக்கு நாப்கின் "நா'னே'" வாங்கிட்டு வந்துருக்கேன்.கடக்கார"ன்" மடிச்சி மறச்சி வச்சி குடுக்க போவான், Bro அத ஏன் மறைக்கனும் அதுலாம் ஒன்னும் இல்ல குடுங்கன்னு எத்தனையோ தடவ வாங்கிருக்கேன்( சுய விளம்பரம் ).

பெண்களுக்கே தெரியாத விஷயம்கூட எனக்கு தெரியும் என்று பெருமையடித்துக்கொள்வான்கள்.

'எப்டி வெளிப்படையா பேசுறிங்க நாங்களே இதெல்லாம் சொல்லத்தயங்குவோம்,' என்றால் இன்னும் அவன்களின் வேகம் அதிகமாகிவிடும்...இதுல என்ன இருக்கு இதெல்லாம் மறச்சி மறச்சி வச்சி தான் நம்ம சமூகம் இப்டி இருக்கு.எல்லாரும் இத பேசணும், பாலியல் கல்வி நடத்தப்படணும் என்று கொதிப்பான்கள்.பிறகு இவன்கள் பாடம் எடுக்கத் தொடங்கிவிடுவான்கள். ஆனால் இவன்களது பாடம் முழுக்க முழுக்க வேறானது. விளக்கத்தேவையில்லை.

பேசத்தொடங்கிய ஒரே நாளில் அந்தப்பெண்ணிடம் மாதவிடாய் என்றைக்கு என்று வரை தன் அசாத்திய வாய்வித்தையால் வாங்கிவிடுவான்கள்.

'எனக்கு மெசேஜ் பண்ணப்புடிக்காது' என்று இரண்டாம் நாள், ஃபோன் செய்வான்கள்.இந்த பக்கம் 'அய்யோ வீட்ல இருக்கேன் பேச முடியாது' என்று அழைப்பை ஏற்காததற்கு காரணம் சொன்னால்..அதற்கும் பாடம். 'பாருங்க சமுதாயம் எப்டி இருக்கு.ஒரு பையன் எப்ப வேணாலும் யார்ட்ட வேணாலும் பேச முடியும்.ஆனா பொண்ணால முடியாது.இதெல்லாம் நீங்கதான் ஒடைக்கணும் தோழர்  நீங்க தான் பேசணும் தோழர் வெளிய வரணும்' என்று ஏத்திவிடுவான்கள்.ஏனென்றால் இவன்களுக்கு பெண்களிடம் பேச வேண்டும்.ஊர் சுற்ற வேண்டும்.அதற்கு தடையாக பண்பாட்டு நிறுவனமான குடும்பம் இருக்கிறதல்லவா ஹாஹா.மற்றபடி பெண்விடுதலை பற்றியெல்லாம் இந்த ஆண்குறியன்களுக்கு என்ன அக்கறை இருந்துவிட போகிறது.

அடுத்து ஃபோன்லயே பேசிட்டு இருக்கோம்.நம்ம மீட் பண்லாம் தோழர் என்பான்கள்.'நீங்க வாங்க உங்களுக்கு நிறைய தோழர்கள அறிமுகப்படுத்துறேன் அவங்கக்கூட தொடர்பு வச்சிக்கோங்க சேந்து இயங்குங்க' என்று "புலவர் கணக்காக செந்தமிழிலெல்லாம் பேசுவான்கள்".

ஆங்கில கெட்ட வார்த்தைகள் தாம் பேசுவான்கள்.தமிழில் எல்லா தகாத வார்த்தைகளும் பெண்களை இழிவு செய்வதாக இருக்கிறதல்லவா...?! புரட்சியாளன்களாயிற்றே இவன்கள் அப்படியெல்லாம் பேச மாட்டான்கள். ஆங்கிலத்திலும் பதிவுகள் போடுவான்கள்.அப்போது தானே தன்னை 'பெரிய தலைக்கட்டு' என்று நினைப்பார்கள்.

தோழர் நீங்க எப்ப வேணாலும் என்ன contact பண்ணலாம் தோழர் I'm always available and be for you, there for you என்று சொல்வான்கள்.ஆமாம்,வெறும் வாயளவில் தானே கோட்பாடு,சமத்துவம் எல்லாம்...பிறகு ஏன் always available ஆக இருக்க மாட்டான்கள்.இவன்கள் ஃபோனில் சமத்துவம் பேசுவான்கள் அவன்கள் அம்மாக்கள் தன்னந்தனியாக அடுப்படியில் உழன்றுக் கொண்டிருப்பர்.இவன்கள் இருக்கும் இடத்திற்கு சோறும் தேடி வரும்...ஆணாயிற்றே.தின்ன தட்டையும் எடுக்க மாட்டான்கள்.

உண்மையாக புத்தகம் வாசிப்பவர்கள் கூட புத்தகப்பையை எப்பொழுதும் தோளில் மாட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

இவ'ன்'கள் 

"நான் ஒரு இது நான் ஒரு அது,.." என்று அச்சடித்த வாசகத்தை / உண்மை புரட்சியாளர்களின் படங்கள் ஒட்டப்பட்ட ஒரு டி- சர்ட்டையும் ஒரு க்ராஸ் பேக்கையும் மாட்டிக்கொண்டு தலைமுழுக்க மூஞ்சி முழுக்க மயிரோடும் கழுத்தில் எந்நேரமும் தாலி போல தொங்கவிடப்பட்டிருக்கும் ப்ளூடூத் ஹெட்செட்டையும் அணிந்து கொண்டு வருவான்கள்( நான் க்ளீன் ஷேவ் தான்.head-phones இல்ல,,அப்பாடா இந்த லிஸ்டுல நம்ம இல்ல என்பதற்காக நீங்கள் இல்லாமல் போய்விடமாட்டீர்கள்).

மிகவும் casual ஆக நடந்துக்கொள்வான்கள்.கைக்குலுக்குவதென்ன கட்டியணைத்துக்கொள்வதென்ன, தோளில் கைப்போட்டு நிழற்படம் எடுத்துக்கொள்வதென்ன (பிறகு இதையெல்லாம் நினைத்து காமலோகத்தில் சிறகடிப்பான்கள் என்பது டோலிகளில் எத்தனை பேருக்குத் தெரியும்)...

தோழர் உங்களுக்கு ஒரு புத்தகம் கொடுக்கணும் என்று "பெண் ஏன் அடிமையானாள்" புத்தகத்தை நீட்டுவான்கள். விலை குறைவாக அந்த ஆகச் சிறந்த புத்தகம் விற்கப்படுவதன் உண்மை நோக்கம் நிறைவேறுகிறதோ இல்லையோ இவன்களுக்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது. 'படிச்சிட்டு சொல்லுங்க தோழர். இன்னும் நிறைய புத்தகங்கள உங்களுக்கு தரேன்' என்பான்கள்.

பெரும்பாலும் இதுபோன்ற கூட்டங்களில் அந்த ஒரு போலி டோலன் மட்டும் இருப்பான்.அவனைசுற்றி எப்போதும் ஐந்து ஆறு போலி டோலிகள் இருப்பாள்கள்.

புதிதாக சிக்கிய அந்த பெண்ணிடம் தற்பெருமை பேசிக்கொள்வதற்காகத்தான் அந்த முதல் கூட்டம் அமையும்.

'இவங்கலாம் முன்னாடி எப்டி இருந்தாங்க தெரியுமா..!? சுடிதார் போட்டுக்கிட்டு ஷால் போட்டுக்கிட்டு பொட்டுலாம் வச்சிக்கிட்டு முடிலாம் நீளமா...பாக்கவே சிரிப்பா இருக்கும்.இப்போ பாருங்க தோழர் எப்டி மாஸ்ஸ்ஸா இருக்காங்களா ..?! கொஞ்ச கொஞ்சமா பேசி நாந்தான் மாத்துனேன்' என்று சொல்வான்கள்.

அதாவது அவன்கள் விரும்புற உடலாக.

அவன்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்று இவள்களும் ஆடையில் மாற்றம் மயிரில் மாற்றம் என எல்லாவற்றையும் செய்யத் தயாராகி விடுகிறாள்கள்.

நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி, நுகர்வு உடலாக வேண்டும்.அதற்கு பண்பாடு பெறும் தடையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே பண்பாட்டை உடைக்க துடிக்கிறார்களே தவிர சமூக விடுதலை பற்றியோ சமூக மாற்றம் பற்றியோ ஒரேயொரு மண் அளவுக்கூட இங்கு பெரும்பாலான 'பெண்பாலினத்தவர்களுக்கு' அக்கறை இல்லை என்றே கூறலாம்.

டோலிகளிடம் எந்த முன்னறிவிப்பும் அனுமதியும் இல்லாமல் இவன்களாகவே S/L/M ஆகத்தான் இருக்குமென்று அவன்கள் ரசிப்பதற்கு ஏற்ற 'பண்பாட்டை தகர்க்கும் வகையில் அமைந்த ஆடைகளை', ஆன்லைனில் ஆட்டர் செய்து வீட்டுக்கே போகும்படி செய்துவிடுவான்கள்.

'தோழர் நானே நேர்ல வாங்கியிருந்தாலும் அளவு இவ்ளோ சரியா இருந்துருக்காது எப்டி!?' என்பாள்கள்.'ஹேய் நான் உன்ன பாத்துருக்கேன், HUG பண்ணிருக்கேன் தெரியும்ல' என்று இந்த செயலுக்கு பெருமையடித்துக்கொள்வான்கள். எத்தனை பேருக்கு வாங்கிக்குடுத்தா...பாத்தே அளவு கண்டு புடிக்குற அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆன 

ஆளா இவன்!? அய்யோ! என்றெல்லாம் அப்போது மூளை யோசிக்காது.

அவன்களே...'எத்தன தோழர்களுக்கு வாங்கிக்குடுத்துருப்பேன் எனக்கு தெரியாதா!?' என்பான்கள்.

உடனே அந்த உடையோடு தனியானதொரு சந்திப்பு.

'அவர்கள் போல நானும் அந்த தோழருக்கு அவ்ளோ ஸ்பெஷலா வாவ்' என்று சிறகடிக்கத்தொடங்கிவிடுவாள்கள் டோலிகள். இல்லை இல்லை மன்னிக்கவும், ரத்தம்,சதை,நாடி, நரம்பு எல்லாம் புடைக்க, தன்னையும் ஒரு புரட்சியாளராக உணரத்தொடங்குவாள்கள்.

சுடிதாரிலிருந்து பேண்ட் சட்டைக்கு மாறினாலே பெண்ணியவாதிகள் என்ற பிம்பம் இங்கு இருக்கிறது.புறத்தோற்றத்தில் ஆண்களை காப்பி அடித்தால் சமத்துவம் வந்துவிடுமாம் ஹாஹா.

ஆண்கள் உடை என்று 'சொல்லிக்கொள்கிற' உடையை அணிந்தால்தான் சமத்துவம் வருமாம்.சரி அவன்கள் வழிக்கே வருவோம்.பெண்கள் உடை என்று சொல்லப்படுகிற உடைகளை ஆண்கள் அணிந்தால் அதுவும் சமத்துவம் தானே.பழமைவாதிகளை விட்டுவிடுவோம்.எத்தனை டோலன்கள் இதனை செயல்படுத்த தயாராக இருப்பான்கள்.

முழங்கால் அளவு தான் பெண்கள் ஆடையணிய வேண்டுமா!? அது வெறும் கால் தானே அதில் என்ன இருக்கிறது என்பவன்களில் எத்தனைப் பேர், ஷார்ட் ஸ்கேட் போட்டுக்கொள்ள தயாராக இருக்கிறான்கள்..? 'க்ராப் டாப்' களை கொண்டாடி தீர்க்கும் போலி தோழன்களே ! அது வெறும் வயிறு, தொப்புள் தானே! ஏன் நீங்கள் அணிந்துக் கொள்ளக்கூடாது.சமத்துவம் இப்போது எங்கு போய்விடுகிறது.நான் என்ன பொண்ணா!? ஹேய் நா transgender இல்ல(நக்கல் சிரிப்போடு).நாங்களாம் இது போட்டா நல்லா இருக்காது.உங்களுக்கு தான் மாஸ்ஸா அழகா இருக்கும் என்று சொல்வான்கள்.மொத்த வன்மமும் வெளியே வந்துவிட்டதா இப்போது.

பெற்றோர்களோ உறவினர்களோ நண்பர்களோ இயல்பாக கேட்க நேர்ந்தாலும்...கத்திக்கூப்பாடு போடுவார்கள். என் உடை, என் விருப்பம், நீங்கள் யார் கேட்பதற்கு, நான் அவ்வாறான உடை அணிவதில் உங்கள் பண்பாடு கெட்டு விடுகிறதா....?! 

ஆகா Point லாம் சரி தான் ஆனால் வாய் அவன்களுடையதாகிற்றே.

நான் எங்கு வேண்டுமானாலும் செல்வேன்.எப்போதும் வேண்டுமானாலும் வருவேன்+..

டீ கடைக்கோ, ரெட்ஸ்டாரண்ட்டுக்கோ,தியேட்டருக்கோ, ஷாப்பிங் மாலுக்கோ,பப்புக்கோ, கடலுக்கோ Enjoy பண்ணுவதற்கு  தானே செல்லப்போகிறீர்கள்‌.விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தப்போய்விட போகிறீர்களா!? பேருந்துநிலையங்களில் அந்த மூத்திர கவுச்சியில் வாழப்பழகிய அவர்களின் வாழ்வியல் நிலையை மேம்படுத்தத்தான்  போய்விடப்போகிறீர்களா!?. கும்மாளம் அடிப்பதற்கு எதற்கு  இவ்வளவு பேச்சு ஹாஹா.


முழுக்க முழுக்க நுகர்வு உடலாகத்தானே மாறியிருக்கிறீர்கள் டோலிகளே நீங்கள்.

அடிக்கடி ஊர் சுற்றுவதால் வீட்டில் மரண அடி விழுந்ததை இவன்களிடம் சொன்னால் மீண்டும் பாடம்.நீங்க சின்ன குழந்தை இல்லத்தோழர்.இதுலாம், Domestic violence. நீங்க வீட்ட விட்டு வெளிய வாங்க.படிச்சிக்கிட்டே part- time job பாருங்க, சொந்த காலுல நில்லுங்க தோழர், எத்தனையோ பெண்கள் வீட்ட விட்டுட்டு தனியா தைரியமா தங்கி இருக்காங்க.நான் வீடு பாத்து தரேன்.பண உதவிக்கும் தயாரா இருக்கேன்.நீங்க வெளிய வாங்கத்த்த்தோழர், என்று கிளப்பிவிடுவான்கள்.

"மயில் இறகு அடியிலிருந்து தப்பித்து ரோடு ரோலர் அடியில் சிக்கிய கொசு போல" ஆகிவிட்டதே! என்று பட்டால் தான் தெரியும்.

எவனேனும் வேண்டுமென்றே இடித்துவிட்டாலோ,/ கிண்டல் செய்துவிட்டாலோ இந்திய உளவியலில் ஊறிய எந்த ஆண்களாக இருந்தாலும் அவன்களை அடிக்கப்பாய்ந்து விடுவான்கள் (ஹீரோயிசம் காட்டவாவது).

இவன்களுடன் ஊர் பொறுக்க சென்றபோது, எவன்களாவது எதாவது செய்தால்....எதிர்த்து கேட்க இந்த தைரியசாலிகளுக்கு (தொடை நடுங்கி) துணிவிருக்காது.பாருங்க பெண்களை இன்னமும் காம பொருளாத்தான் பாக்குறானுக்க. ச்ச எப்ப இந்த பார்வ மாறுறது?! எப்ப பெண் சுதந்திரம் வர்றது?!? என்பான்கள்.

பெண்களே, ஏன்டா இடிச்ச, திமுரா.. என்று திமிறினால், 'என்ன தோழர் normal women மாதிரி village girls மாதிரி behave பண்றிங்க.அப்ப உங்க உடல நீங்க புனிதமா நினைக்றிங்களா!?' என்று கேள்வியெழுப்புவான்கள்.'mature ஆ நடந்துக்கோங்க.., நீங்க இன்னும் வாசிக்கனும் புரிஞ்சிக்கணும்' என்று அட்வைசுகளை அள்ளிவிடுவான்கள்.post-களில் மட்டும் தைரியம் பறக்கும் ஹாஹா.

(அல்லது) பெண்கள், மயிலு,**",@₹@,₹*# என்று அவன்களை திட்டி தொங்கவிட்டால், தோழர் செம்மத்தோழர், மாஸ் காட்டிட்டிங்க தோழர் என்று கட்டிப்பிடிப்பான்கள் (சண்டை ஓய்ந்து அவன்கள் போன பிறகு ஹாஹாஹா).அவன்களிடம் பட்ட அதே கோவத்தை இவன்களிடம் காட்ட வேண்டியதுதானே!?! இவன் மட்டும் யார்!? 

கற்றுக்கொள்வது, தன் குற்றம் களைந்து தன்னை மாற்றிக் கொள்வது...+++ ஏராளமான நன்மைகள் வாசிப்பில் இருக்கிறது.புத்தகம் வாசிப்பு 'அறிவு' சார்ந்தது.ஆனால், 

இப்போது முழுக்க முழுக்க fashion ஆகிவிட்டது.

Book fair என்றால் போதும்...அதனையும் ஒரு சாக்காக வைத்துக்கொண்டு 'எங்கிருந்தாலும் வந்துருங்க தோழர் புத்தகத்திருவிழா தான் நமக்கான திருவிழா என் அறையில தான் தோழர்கள் வழக்கமா தங்குவாங்க வாங்க...'

'இப்படியெல்லாம் வந்து தங்கியதில்லை, பழக்கமில்லை' என்றால் மீண்டும் பாடம்...புத்தக திருவிழாக்களில் இந்த 'போலி டோலன் டோலி' கும்பலை அதிகமாக பார்க்கலாம்.

கற்பு பற்றி அவன்கள் போடும் போடு....என்ட பெரியாரப்பா...ஈ.வெ.ராமசாமீஇஇ...

வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு கற்பு போகவில்லை...அந்த ஆணுக்குத்தான் கற்பு போய்விட்டது...கற்பை இழந்தவன் அவன் தான்.தவறு பெண்ணிடத்தில் அல்ல, என்றும் 

அவரவர் உடலை பொருத்ததுதான் அதெல்லாம், sports personகளுக்கெல்லாம் உடைந்துவிடும்+...... virginity யை இதை வைத்து முடிவு செய்ய முடியாது அதனால் பெண்களை தவறானவள் என்று குற்றம்சாட்டுவது தவறு என

கட்டுடைத்து வைத்திருப்பதை இந்த ஆண்குறியன்கள் தனக்கு சாதகமாக கட்டுடைத்துக்கொண்டிருக்கிறான்கள்.எவ்வாறெனில்...

நாம பசிச்சா டீ காஃபி குடிக்றோம்ல, சாப்டுறோம்ல அதுபோல சாதாரணமானது தான் காமமும்.அத போட்டுக்கிட்டு அப்டி புனிதப்படுத்தனும்னு அவசியம் இல்ல. அதுக்காக குற்றவுணர்வுக்கு ஆளாகவும் அவசியம் இல்ல.

நமக்கு புடிக்குறத நம்ம பண்றதுதான் சுதந்திரம்.அந்த சுதந்திரம் இந்த நாட்டுல கிடையாது.உடனே, இனக்குழு சமூகத்தை நோக்கி ஓடுவான்கள், விலங்குகளிடம் ஓடுவான்கள்.அயல்நாட்டுக்காரர்களிடம் ஓடுவான்கள்.

தாயோடு மகன் கூடுவதெல்லாம் மிகவும் சாதாரணம் இடைக்காலத்தில் தான் சமூகம் கெட்டு சீரழிந்து ஒருவனுக்கு ஒருத்தி என்று ஆகிவிட்டது.அதனால்தான் வன்புணர்வு குற்றம் அதிகமாகிவிட்டது என்று கத்தி கதறுவான்கள்.

இனக்குழு சமூகத்தினருடைய எண்ணமும் அந்த காமவெறியன்களின் எண்ணமும் ஒன்றா என்ன!?! விலங்குகள் எப்பொழுதும் இவன்களை போல 

காம மிதப்பிலா ஊறிப்போய் இருக்கிறார்கள்.விலங்குகளிடம் இருக்கிற அறத்தில் ஒரே ஒரு பங்கு இவன்களிடம் இருக்கிறதா என்ன?!

Porn Videos-ஐ தவிர அயல்நாட்டினர்களைப் பற்றி வேறு என்ன இவன்களுக்கு தெரியும்!? 

'விலங்குகள் ஆடையா அணிந்து கொண்டு இருக்கிறது..அதனால்தான் வன்முறை இல்லாமல் இருக்கிறது' என்றெல்லாம் பேச பல காமக்கொடூரன்கள் இருக்கிறான்கள்.'அப்போலாம் முழுசா காடா இருந்துச்சி பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் தான் ஆடை என்ற கான்செப்ட் வந்துச்சி (100 சரிதான்).இப்போது தான் வீடு, அனைத்து வசதிகளும் வந்துவிட்டதே (அவ்வளவு தான் அவன்களுக்கு தெரிந்தது) 

பிறகு ஏன் உடை!? ஹிட்லருடைய வதைமுகாமில் ஆடையின்றி ஆண்களும் பெண்களும் இருக்க வைக்கப்பட்ட போது அவர்களுக்கு காம உணர்வே தோன்றவில்லை.ஆடை தான் காமத்தை தூண்டுகிறது என்றெல்லாம் ஆவேசப்படுவான்கள்.அவ்வாறு ஆவேசப்படுகிற டோலன்களில் எத்தனை பேர் ஆடைகளை களைந்து போஸ்ட் போட்டிருக்கிறான்கள்.?! 

ஆடையில்லாமல் தெருவில் திரிய எத்தனைப் பேர் தயாராக இருக்கிறான்கள். பெண்கள் மட்டும் ஆடைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.போஸ்ட் போட வேண்டும்.அப்போது தானே இவன்கள் மகிழ்ச்சியடைவான்கள்.

எந்த ஆணாவது அவனது பின்கழுத்தையோ,இடுப்பையோ,தொடையையோ, கால்களையோ , பாதத்தையோ, தோள்பட்டை எலும்பையோ, கழுத்தெலும்பையோ+..... ஃபோட்டோ எடுத்து போஸ்ட் போட்டுக்கொண்டிருக்கிறான்களா...?! 

தினமும் புடவை அணிந்து வேலைக்கு செல்லும் பெண்கள் கூட அவரவர் வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால், இந்த fake feminist டோலிகள் என்றாவது ஒருநாள் புடவைக் கட்டிவிட வேண்டுமே அய்யையோ! 

ஆண்கள் மட்டும் தான் தண்ணீ,தம்,கஞ்சா  அடிக்கனுமா என்ன?! பொண்ணுங்களும் அடிக்கனும்.ஆம்பளைங்க மட்டும் தான் வேல செய்றாங்களா சம்பாரிக்றாங்களா அவங்களுக்கு மட்டும் தான் உடல், மன சோர்வு இருக்கா என்ன!? இந்தாங்க தோழர் நாங்க வழக்கமா இதுலாம் பண்றதுதான் ,தப்பு தப்புன்னு அடிமைப்படுத்தி வச்சிக்காங்க.அடிங்க த்த்தோழர் என்பான்கள்.try it நாங்களும் அப்டி தான் தயங்குனோம் இப்போ பழகிட்டு என்பாள்கள் டோலிகள். சங்க காலத்தில கள் குடிக்குற பழக்கம் இருந்துச்சி ஆண், பெண் இருவருக்கும் பொது தான். மட்டு உண்டு மகிழ்ந்து ஆனந்த நடனம் ஆடிருக்காங்க.இடையில தான் இப்படி சமூக மாற்றம் வந்துட்டு என்றெல்லாம் பேசுவான்கள்.

குடிப்பதே தவறு இதில் சம உரிமை பேச்சு வேறு.

'ஒரு சிறுகதையில் ஒருத்தன் வருவானே காரில் டிராப் பண்றேன்' என்று...அப்படிப்பட்டவன்களோடு எப்படி தனியாக நம்பி போகக்கூடாதோ...

அதே போல் தான் 

இந்த fake feminist ஆண்குறியன்களுடனும் எங்குமே செல்லக்கூடாது.

ச்ச இந்த பெண்கள்லாம் பாவம் தினம் தினம் ஆண்களுடைய காமப்பசிக்கு இரையாகுறாங்க.பத்து குழந்த பெத்தவங்க காலத்துலேர்ந்து இந்த காலம் வரைக்கும் பொண்ணுங்கள எப்டி handle பண்ணுனும்னே பசங்களுக்கு தெரியாது.அவனுங்க பசி தீருற வரைதான் எல்லாமே என்றெல்லாம் ஆண்களை பற்றி இவன்களே பேசி பெண்ணுக்காக பெரிதாக இரக்கப்படுவான்கள்.கண்ணீர்க்கூட சிந்துவான்கள்.உடனே, என்னோடு இருந்த தோழிகளெல்லாம் என்னை இந்த விதத்தில் மிகவும் பாராட்டுவார்கள் என்று மிகவும் சாதாரணமாக போகிற போக்கில் சொல்லிவிடுவான்கள்.

'என்ன சொல்றிங்க' என்று வியந்தால்...'ஹேய் இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்' என்பான்கள்.அவன்கள் எதையும் எந்த டோலிகளிடமும் மறைக்க மாட்டான்கள்.'எவ்வளவு உண்மையா இருக்காங்க வாவ்' என்று சிலிர்த்துக்கொள்வாள்கள்.

இதெல்லாம் மிகவும் சாதாரணம் தான் போலிருக்கு என்று புதிதாக வருகிற தோழிகளையும் நம்ப வைக்கும்வரை கதையோ நடந்ததோ பேசிக்கொண்டே இருப்பான்கள்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா... ஆரம்பத்தில் சமத்துவம் பேசத்தொடங்கிய வாய், சமத்துவத்தை அறிந்துக்கொள்ள விழைந்த காது தற்போது எதை மட்டும் நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது என்பதை உணர முடிகிறதா...?!

இந்த காமக்கொடூர ஆண்குறியன்களின் முழு நோக்கமும் பெண் உடல், ஆடை, காமம், முழுக்க முழுக்க மகிழ்ச்சி என்ற நுகர்வு கலாச்சாரம்.

பெண்ணியம் என்றால் என்ன!? Eco feminism பற்றி சொல்லுங்க,இருபது பெண்ணிய எழுத்தாளர்களை சொல்லச்சொல்லுங்கள்..பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்துல பெரியார் என்னாதான் சொல்லிருக்காரு!? அட!! ஈ.வெ.ரா வில் இருக்கும் 'வெ' ன்னா என்ன!? என்று நேரில் கேட்டுப்பாருங்கள்.ஓடிவிடுவான்கள்.ஃபோனில் கேட்டால் கூகுள் காலில் விழுந்துவிடுவான்கள் ஹாஹா.

பழங்குடி பெண்ணையோ திருநங்கையையோ ஏற்கனவே வேறு பல ஆண்குறியனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள சொல்லுங்களேன்.எனக்கு ப்ரச்சன இல்ல வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று வெட்கம் இல்லாமல் பதில் சொல்வான்கள்.

ரெட் லைட் பகுதியில் வாழும் பெண்களையெல்லாம் இவன்கள் விரும்புவதில்லை.கன்னித்திரை ன்னு லாம் ஒன்னும் இல்ல.குதிரை சவாரியோ சைக்கிள் ஓட்டினாலோ ஓடினாலோக்கூட உடையும் என்று  சொன்ன இவன்கள்தான் தேடி தேடி அதை கிழிக்க முயன்வான்கள்.

ஒரு பெண்ணை திடீரென கடத்திக்கொண்டு சென்றோ அல்லது காதலிக்கிறேன் என்று ஏமாத்தியோ வன்புணர்வுக்கு உள்ளாக்கிவிட்டு பிறகு போலீஸ் தண்டனை, பெருத்த அவமானம் மன சுடுதல் இவற்றிற்கெல்லாம் உள்ளாவதைக்காட்டிலும் ஒரு மாதமோ ஆறு மாதமோ பொருத்திருந்து சில முற்போக்கு கருத்துகளையும் பெண்ணியக் கருத்துகளையும் பேசி கட்டுடைத்து, அவர்கள் வாயாலேயே இது என் விருப்பம் என்று விருப்பத்தையே உருவாக்கி பிறகு புணர்வது எளிது தானே, சிக்கல் ஏதும் அற்றது தானே.

இந்த போலி பெண்ணியவாத ஆண்குறியன்களுக்கு பெரும்பாலும் ஆண் நண்பர்களே இருக்க மாட்டனர். இவன்களால் பெண்களிடம் பேசாமல் உயிரே வாழ முடியாது.பைத்தியம் முற்றி விடும்.வாங்க தோழர் உரையாடலாம் என்று எவள்களையாவது அவன்கள் அழைத்துக்கொண்டே இருப்பான்கள்.

இவன்கள் காதல் என்ற  பேச்சிற்குள் போவதே கிடையாது.காதல்லாம் எனக்கு ஆகாது நான் இப்போது வரைக்கும் என்னை விட்டுவிட்ட சென்ற காதலியை தவிர வேறு யாரையும் என் மனதால் நினைத்து கூட பார்க்க மாட்டேன் என்பான்கள்.அப்படி சொல்லும்போதே அவன்கள் தலை அந்த புதிய டோலியின் மடியிலோ தோளிலோ மார்பகத்திலோ இருக்கும் (கூடலுக்கு முன்போ பின்போ) ஹாஹா.

வேறு காதல் செய்ய மாட்டான்களாம் ஆனால் தினம் ஒரு பெண்ணை தன் வெறிக்கு இரையாக்குவானாம்.

காதல் என்றால் ஒருத்தியிடம் மட்டுமே நேரம் செலவிடுகிற போல் இருக்கும்.'திருமணமும் செய்து கொள்ள மாட்டேன். ஏனென்றால் திருமணம் என்று வந்துவிட்டால் அது பெண்ணுக்கான சிறையாகிவிடும் தெரியாமல் கூட நான் ஒரு பெண்ணை அடிமைப்படுத்திவிடக்கூடாது என்று நினைப்பவன் நான்' என்று சொல்லிக்கொள்வான்கள்.திருமணம் என்று வந்துவிட்டால் இவன்களின் மன்மத லீலைகளை தொடர மனைவி என்பவர் தடையாக இருப்பார் அல்லவா!?.

பிறகு அந்த புதிய டோலியும் பழைய டோலியாகிவிடுவாள்.எங்கிருந்து கிடைத்துக்கொண்டே இருப்பார்களோ தெரியவில்லை அவன்களுக்கு புதிய புதிய டோலிகள்.

ஆனால், இவன்கள் திருமணம் செய்துகொள்ளாமலும் இருக்க மாட்டான்கள்.இவ்வளவு திருட்டு வேலைகளை செய்தபோதும் அவன்கள் மறைமுகமாக வேறு பெண்களை காதலித்துக் கொண்டுதான் இருப்பான்கள்.அவளோடு ஒருநிமிடம் கூட பேசுவதற்கு ஒதுக்க மாட்டான்கள்.தலைவனுக்காக அவள் எப்போதும் காத்துக்கொண்டே இருக்க வேண்டுமல்லவோ!!??

அந்த காதலியைப் பற்றி மட்டும் எந்த டோலிகளுக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்வான்கள்.ஒருவேளை இவன்களது காமலீலைகள் தெரிந்துவிட்டால் திருமணத்திற்கு பின் அதிகாரம் செய்ய முடியாதே!? சோத்துக்கு வழியில்லாமல் போய்விடுமே!?

எப்பொழுதும் always available ஆக இருந்த இவன்கள் திடீரென சில மாதம் காணாமல் போய்விடுவான்கள்.சில மாதங்கள் கழித்து திருமணமாகிவிட்டது என்று அறிவிப்பான்கள்.பெற்றோரின் வற்புறுத்ததலின் பேரில் என்று கதையளப்பான்கள்.பெற்றோருக்கு எதிராக பெண்களை பேச வைக்கத்தெரிந்த இவன்களுக்கா பேசத்தெரியாமல் போய்விடும்..?!

அவன்கள் திருமணம் செய்து கொண்ட பெண் கட்டாயமாக மிக கட்டாயமாக குடும்பப் பாங்கியான பெண்ணாகத்தான் இருப்பாள்.இவ்வளவு பேசுபவன்கள் எவனும் தனக்கு இணையாக போகும் பெண்ணிடம் பெண்ணியமோ சமத்துவமோ பேசமாட்டான்கள்.பேசினால் இவன்களும் வீட்டு வேலை செய்ய வேண்டுமல்லவா..!?

பெண்ணியம் சமத்துவம் பேசும் எத்தனை ஆண்குறியன்கள் சம உரிமை பேசும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறான்கள்.

இவன்கள் பயிற்றுவித்த பாடத்தை முழுமையாக ஏற்று, அவன்களின் விருப்ப உடலாகவே மாறிய ஒரு பெண்ணை இணையாக்கத்தான் எத்தனை பேர் தயாராக இருக்கிறான்கள்!?

உறவினர் வீட்டுக்கு செல்லும் போது இவன் வாங்கிக்கொடுத்த அந்த புரட்சிகரமான உடையோடு,கழுத்தில் தாலி இல்லாமல்,கழுத்தளவு உள்ள மயிரில் கலர் கலராக வண்ணம் பூசப்பட்டு கிளம்பியிருக்கிற துணைவியை இவன்கள் கூட்டிச்செல்ல தயாராக இருக்கிறான்களா?!? 

கால் மீது கால் போட்டு அமர்ந்தால் அப்போது சும்மா இருப்பான்களா?!?

இவன்களை போல தினமும்,ஒரு ஒரு டோலரோடு நிறைவாக பசியாறிக்கொண்ட பெண்கள் என்றால் இவன்கள் ஏற்றுக்கொள்வான்களா!?

இவன்களுக்கு வருகிற மனைவி மட்டும் பண்பாட்டை முழுமையாக ஏற்ற கற்புக்கரசியாக இருக்க வேண்டும்.

என்ன அறம் இது...? 

பலமுறை கூடிய பின்பு, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா !? என்று பெண் கேட்டால்..."ஹேய் என்ன இது!? எனக்கு கல்யாணம் பண்ற ஐடியாலாம் இல்லன்னு நான் எப்போவே சொல்லிட்டேனே" என்பான்கள். 'இப்போவுமா!?' என்றால்...ஆமா.இப்போ மட்டும் என்னாகிற்று என்பான்கள் மிக சாதாரணமாக.

காமத்தை வெளிப்படையாக பெண்கள் சொல்லக்கூடாது, பொங்கி அப்படியே வழியக்கூடாது, ஆனால் நிரம்பிய பானையில் எட்டிப்பார்க்கும் நீர் போல தான் பெண்ணின் எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று இருக்கிற விதியை இந்த போலி பெண்ணியவாதிகள் தகர்க்கிறான்கள்.பெண்களும் காமத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் புரட்சி செய்கிறான்கள்.பாலியல் நிகழ்த்துதலில் பெண்கள் அமைதியாக இருக்கிறார்கள் அதை மாற்றத்துடிக்கிறான்கள்."இருவருமே புலியாக வேண்டும்.ஆண்தான் வேட்டையாட வேண்டுமா என்ன!?" என்பான்கள்.வெளிநாடுகளில் எல்லோருமே புலிதான் என்பான்கள்.

ஆசை வார்த்தை பேசி தன்வயப்படுத்துதல் என்பது பழமைவாதிகளின் பழைய ட்ரெண்ட்.

இயங்களையும் இசங்களையும் தனக்கு சாதகமாக மாற்றிப்பேசி பெண்ணுடலை தன்வயப்படுத்துதல் தான் தற்போதைய Trend.

பழங்கால இலக்கியங்களில் வரும் தலைவன்களிடமும் கூடலுக்கு பிறகு...திருமணம் செய்து கொள் திருமணம் கொள் என்று கெஞ்சிக்கொண்டிருந்த அதே கதைதான் இப்போதும்.ஆனால், காலங்காலமாக 'தலைவன்களுக்கு' மன்னிக்கவும் 'பரத்தன்களுக்கு' திருமணம் மட்டும் நோக்கமே இல்லை.

முன்பு பொய் பாராட்டல் இருந்தது.தலைல பூச்சி என்று தட்டி விடுவது போல பொய் சொல்லித்தீண்டியவன்கள் இப்போது வெளிப்படையாகவே ..."அய்யோ இன்னைக்கு ரொம்ப அழகா தெரியுற கடிச்சிடுவேன் போல" என்கிறான்கள்.

'அழகு என்று தான் அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் காலங்காலமாக பெண்களை' என்று பகலில்,கூட்டத்தில் பேசுவான்கள்.தனிமையில் அதெல்லாம் காணாமல் போய்விடும்.

உண்மையில் இதுதான் பெண்விடுதலையா 

இவன்கள் பேசுவது தான் சமத்துவமா?! என்று நிதானமாக நினைத்துப் பார்க்கையில் வரும் கோபத்தோடு அந்த ஆண்குறியதிகாரம் உடையவன்களிடம்  கேட்கையில்...மிகவும் நிதானமாக பதில் சொல்வான்கள்.

"அப்ப சிணுங்கிப்புட்டு இப்ப என்ன இப்டி கேக்ற, நா என்ன உன்ன ரேப் ஆ பண்ணேன், உனக்கும் புடிச்சிது தான! அப்ப நீ என்ன திட்டிருக்கலாம்ல,செருப்பால  அடிச்சிருக்குலாம்ல" என்று சொல்வான்கள்....என்ன பதில் சொல்வீவீவீவீர் டோலிகளே!?

டோலிகளே நினைவிருக்கிறதா!

ஊசி எடம் கொடுக்காமலா நூல் நுழையும்!? என்று பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணை குறை கூறுகிற இந்த மோசமான சமுதாயத்தை மாற்றுவது போல பேசிய அதே யோக்கியன்கள் தான் இன்று அதே பழமொழியை வேறுமாதிரியாக உபயோகிக்கிறார்கள், எந்த சுடுதலும் இல்லாமல். அவன்களுக்கு சாதகமாக.

"ஆண்கள் என்றாலே அயோக்கியன்கள் தான்" என்று பேசும் கூட்டத்தில் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிக்கொள்வான்கள். முழு அயோக்கியனின் வடிவமாக இவன்களே இருப்பான்கள்.

"ஒழுக்கம் ஒழுக்கம் என்று எங்கே கூக்குரல் கேட்கிறதோ, அங்குதான் ஒழுக்கக்கேடு அதிகமாக இருக்கும்" என்பது 100 க்கு இருநூறு சதவீதம் உண்மையோ... அதேபோல தான் ஆண்களையே ஆண்கள் அயோக்கியன்கள் என்று வேகமாக தலையாட்டி அதை பெருமையாக ஒத்துக்கொண்டு சிரிப்பவன்களை நம்பக்கூடாது என்பதும் 100 க்கு ஆயிரம் சதவீதம் உண்மை.

கூட்டத்தில் எவனோ இடித்துவிட்டால், கோபப்படத்தெரிகிற நமக்கு நம் அனுமதியில்லாமல் கூட்டமாக இருக்கிறபோது மிகவும் சாதாரணமாக தோள் மீது கை போடும் போது ஏன் அந்த கோவம் வராமல் போகிறது....

புடவையில செம்மையா இருக்கிங்க, பூ வச்சிருக்குறது நல்லா இருக்குன்னு எவனாவது வந்து சொல்கிறபோது இதெல்லாம் பாக்றதுதான் உன் வேலையா என்று திட்டத்தெரிகிற நமக்கு பேண்ட் சட்டயில செம்மையா இருக்கிங்க கெத்தா இருக்கிங்க தோழர்ன்னு சொல்கிறபோது ஏன் திட்டுவதற்கு பதிலாக புன்னகை வருகிறது.கெத்து என்ற வார்த்தை மீது அப்படி என்ன மோகம்!?!

ஷால் போடு, இந்த டிரஸ்ஸ அடுத்த முறை போடாத என்று சொல்கிற போது வருகிற கெட்ட வார்த்தை..ஷால் போடாதிங்க தோழர், இந்த டி சர்ட் போடுங்க இப்டி முடி வெட்டிக்கோங்கன்னு சொல்லுகிறபோது எங்கு செல்கிறது அந்த வேறி..?!

பெண்களோடு பயணிப்பதையும்  ஊர் சுற்றுவதையும் விட ஆண்களோடு ஊர் சுற்றுவதில் அப்படி என்ன நிறைவு!? அவன்களுக்கு எப்படி பெண்கள் இல்லாமல் இருக்க முடியாதோ அதேபோலதான் இந்த அவள்களுக்கும் ஆண்கள் இல்லாமல் இருக்க முடியாது 'பேர் மட்டும் feminist'.

காமத்தை புனிதப்படுத்துகிறவன்கள், பழமைவாதிகள் கூட அவசரப்பட்டுடோமோ !? என்றாவது யோசிப்பான்கள்.அந்த நேரத்து நியாயம் இப்போது தவறு என்று குறைந்தபட்ச மனசுடுதலுக்காகவேணும் வருத்தம் கொள்வான்கள்.மன்னிப்புக்கேட்டுவிட்டு. வருந்திவிட்டால் போதுமா !? என்றால் அதுவும் இல்லை.இங்கு அந்த மன்னிப்புக் கூட இருக்காது என்பது தான் உச்சபட்ச கொடுமை.

தன்மீது தவறே இல்லை என்று நியாயப்படுத்தி பெண்களை மீண்டும் குற்றவுணர்வுக்குள் வழக்கமாக தள்ளுவதை போல செய்துவிடுவான்கள்.

இவன்களுக்கு காமத்தை தவிர வாயடிப்பதை தவிர மற்றவர்களை பழி சொல்வதை தவிர வேறு எதுவும் தெரியாது.

"கழிவறையில் விந்தை வெளியேற்றுவதும் ஒரு பெண்ணிடம் விந்தை வெளியேற்றுவதும் ஒன்றுதான்" 

( பல முறை கரு உண்டானதால், திருமணம் செய்து கொள் என்று கெஞ்சிய  ஒரு பெண்ணிடம்  பெண்ணியவாத புலி என்று உலாவரும் காம கொடூரன் கூறிய வார்த்தைகள் இவை).

அதீத கோவத்தில் என்ன சொல்லி இவன்களை திட்டுவது என்று தெரியாமல்,

கண்ட்ஆர்ஓ×× என்று திட்டினால் கூட சிரித்துக்கொண்டே இவன்கள் ஆமாம் என்று ஒப்புக்கொள்கிறான்கள்.இவன்கள் விட்டு வைத்திருப்பதே தாயையும் கூட பிறந்தவள்களையும் தான். எனவே, இவன்களை கோவப்படுத்த வேண்டுமென்றால், த்ஆய்ஓ×× என்றும் ஒக்¢£$^¢£ என்றும் தான் திட்ட வேண்டும்.அப்போது வரும் பாருங்கள் அவன்களுக்கு கோபம்.ஏனென்றால் அவன்கள் விட்டு வைத்திருப்பதே அந்த இருவரை மட்டும்தான்.

இவ்வளவு பேசுகிறவன்கள்...அவன் தாயையும் அக்கா, தங்கையையும் அமர வைத்து இனக்குழு சமூகத்துல யார் வேணாலும் யார்கூட வேணாலும் புணரலாம்.மகன் தாய்க்கூட புணரலாம்.அக்கா தங்கையோடு புணரலாம் என வகுப்பு எடுக்கலாமே!? அது மட்டும் ஏன் இவன்களால் முடியாமல் போகிறது .

அவனவன் ஆத்தாளுக்கும் கூட பொறந்தவளுக்கும் இருக்குறது மட்டும் கருவறை மத்த பொண்ணுக்கு இருக்குறது மட்டும் கழிவறையா!? என்ற ஒருவரது கேள்வி பல டோலன்களை நோக்கி எறியப்படும் ஈட்டி.

ஆண்மை அழிய வேண்டும்.

பெண்மை அழிய வேண்டும்.

பூனைகளால் எப்பொழுதும் எலிகளுக்கு விடுதலை கிடையாது.

எத்தனை உண்மையான சொற்கள்.

உறுப்பை அறுத்துவிட்டால் மனித இனம் அழிந்து விடுமே என்று கதறினால்...பெரியார் சொன்ன அதே பதிலைத் தான் நாங்களும் சொல்கிறோம்.

நாங்கள் பெரியார் பக்கம்.நீங்கள்?!

ஆணிபாலினத்தின் மீது பெண்பாலினத்திற்கு இருக்கின்ற மரியாதை நசுக்கப்படாதவரை ஆணாதிக்கத்தை ஒரு தேர்த்துகள் அளவுக்கூட அசைத்துப்பார்த்துவிட முடியாது.

குறியறுத்தவர்க்கு தான் இங்க பெண்ணியம் பேசவும் பெரியாரியம் பேசவும் தகுதி இருக்கிறது.

'நல்ல கோட்பாடு, நல்ல கருத்து கொடியவர்கள் கையில் போனால் எப்படியெல்லாம் சீரழிகிறது..

பழமைவாதிகளைக் கூட நேராக நின்று எதிர்த்துடலாம்.இவனுகளலாம் கண்டு புடிக்குறதே ரொம்ப கஷ்டம்.பொறுக்கிங்கள கூட நம்பிடலாம் போல பெண்ணியம் பேசுறவனுங்கள மட்டும் நம்பவே கூடாது.feminism ன்ற பேர கேட்டாலே எரிச்சலா இருக்கு...,' என்று புலம்புகின்றனர் பாதிக்கப்பட்ட பெண்கள்.

'எனக்கு ரொம்ப நாள் ஆச ஒன்னு.

ஆடு, மாடு வெட்டுற கத்திய நல்ல்லா பழுக்க காய்ச்சி, ஒரே வெட்டுல தனியா போய் விழனும் அவன் உறுப்ப்ப்பு

அவன் வலியில அலறணும் துடிக்கணும் ஓடணும் நான் ரசிக்கணும்....

மூள கொஞ்சம்கூட யோசிச்சு பாக்க முடியாத வலியா இருக்கும்.ரத்தம் ஓடும்.

அப்போவும் அவனுக்கு

அந்த வலியவிட இனி ஒன்னும் பண்ண முடியாதேன்ற வலிதான்  அதிகமா இருக்கும்' என்று ஆதங்கப்படுகிறார் ஒருவர்.

அறுத்துச் போட்டாலும் அடங்க மறுக்கும் காமக்கொடூரன்களால் பாதிக்கப்பட்ட 17 பெண்கள் இறுதியாக சொல்வது இதைத்தான்.

"பெண்ணியம் சமத்துவம் பேசும் ஆண்குறியன்களை பார்த்தாலே அவன்களது குறியறுக்கத்தான் தோன்றுகிறது",என்று.

மாதவிமணி

1 கருத்துகள்

  1. இவ்வளவும் அனைத்து பால்களிலும் உள்ள சிக்கல்.

    வள்ளலார் கூட வெகு நாட்களுக்குப் பின்னரே தன்னோடே இருந்த போலிகளை உணர்ந்து நீங்கினார். அதுபோல நாமும் நம்மை அவர்களிடமிருந்து விலக்கிக்கொள்வோம்.


    பதிலளிநீக்கு
புதியது பழையவை